CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, November 22, 2008

மறந்துவிட்டாயா??




நெற்றி வகிட்டில்
நீ கொடுத்த
முத்தமும்...
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
சூறையாடிய தினமும்...
தனிமை கிடைக்கையில்
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
நீ ஏனோ எல்லாவற்றையும்
மறந்ததுபோல், மறந்துவிட்டாய்
என்னை...?!

10 comments:

அருள் said...

காதலின் இனிமை...
சோகத்தின் வெறுமை...
இவை இரண்டும் கலந்ததால்
கவிதை அருமை...

கவிதையில் இருக்கும் சோகம் தான் மனசை பாதிக்குது.

காண்டீபன் said...

//நீ ஏனோ எல்லாவற்றையும்
மறந்ததுபோல், மறந்துவிட்டாய்
என்னை...?!/
அழகான வரிகள்.
சிலருக்கு இருக்கும் மறக்கும் சக்தி.. நமக்கு மட்டும் நியாபக சக்தியாய் இருக்கும் அநியாயம்!

Princess said...

அழகாய் காதலின் தவிப்பை உணர்த்தும் கவிதை

நான் said...

மறந்திருக்கமாட்டார்
நடிக்கறார் போலும்

நான் said...

மறந்திருக்கமாட்டார்
நடிக்கறார் போலும்

நாணல் said...

:(

கார்க்கிபவா said...

கவிதை அருமை.. ஏனோ படம்தான் நெருடலாக இருக்கிறது..

Ravishna said...

நல்லார்க்கு....
காதலின் வலியினை கூறிய விதம்....

--ரவிஷ்னா

புதியவன் said...

//நீ ஏனோ எல்லாவற்றையும்
மறந்ததுபோல், மறந்துவிட்டாய்
என்னை...?!//


உணர்வுப்பூர்வமான வரிகள், மனதின் வலி தெரிகிறது.

Unknown said...

அச்சச்சோ அப்படி எல்லாம் மறந்துருக்க மாட்டாருங்க... கவலைப்படாதீங்க.. :))அழகான கவிதை.. :))