CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, December 13, 2008

மெளனங்கள்....கலையட்டும்




உனக்கு மறந்து போயிருக்கும்
முதன் முதலாக கல்லூரி வாயிலில்
எனைப் பார்த்து நீ சிந்திய
உன் முதல் புன்னகை
அந்த நொடி பசுமையாய் என் நினைவில்..

அன்று பார்வைகள் மட்டும்தானே
பறிமாறிக் கொண்டோம்
பின் எப்படி
நீ மொத்தமாய் என்னுள்?

நம் மெளனங்கள்
தெளிவாய் பேசிக்கொண்டதை
நாம் சத்தமாய்
பேசுவதெப்போது???

பூட்டி வைத்த நேசம்
புண்ணியமில்லை
ப்ரியமானவனே புரியும்படி
பேசிக்கொள்வோம் வா!!