CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, January 19, 2009

அழிக்கப்படாத நினைவுகள்..




என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்..
நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்..
-இன்னும்
அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
உன் நினைவுகள்..!!!!!

Saturday, January 3, 2009

புது 'கவிதை' மலர்ந்தது





என்

இதயமென்னும்

சிறைக்குள்

சிக்கிவிட்ட

உன் பிம்பம்

கற்பனைத்

தோட்டத்தின்

கனவுப்ப்பூக்களாகி

இங்கே கவிதாய் மலர்ந்தது!

Saturday, December 13, 2008

மெளனங்கள்....கலையட்டும்




உனக்கு மறந்து போயிருக்கும்
முதன் முதலாக கல்லூரி வாயிலில்
எனைப் பார்த்து நீ சிந்திய
உன் முதல் புன்னகை
அந்த நொடி பசுமையாய் என் நினைவில்..

அன்று பார்வைகள் மட்டும்தானே
பறிமாறிக் கொண்டோம்
பின் எப்படி
நீ மொத்தமாய் என்னுள்?

நம் மெளனங்கள்
தெளிவாய் பேசிக்கொண்டதை
நாம் சத்தமாய்
பேசுவதெப்போது???

பூட்டி வைத்த நேசம்
புண்ணியமில்லை
ப்ரியமானவனே புரியும்படி
பேசிக்கொள்வோம் வா!!

Friday, November 28, 2008

கொடுமைக்காரா...!




எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னே கைது செய்யும்
கொடுமைக்காரனடா நீ!

Saturday, November 22, 2008

மறந்துவிட்டாயா??




நெற்றி வகிட்டில்
நீ கொடுத்த
முத்தமும்...
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
சூறையாடிய தினமும்...
தனிமை கிடைக்கையில்
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
நீ ஏனோ எல்லாவற்றையும்
மறந்ததுபோல், மறந்துவிட்டாய்
என்னை...?!

Tuesday, November 18, 2008

இதயத்தில் பறக்கும் காதல்...





என் ஒட்டுமொத்த
கவிதைகளும்
கண் 'துளி' நீரில்
தத்தளிக்கிறது!

இதயத்தில் பறக்கும்
காதல் விமானம்
இதழ்களில் இறங்க
மறுக்கிறது!

காதல் வந்தபிறகு,
வார்த்தைகள்
வயதுக்கு வந்துவிட்டதா?
தாவணி போட்ட
தமிழுக்கு
அத்தனை வெட்கமா?

உன்
கோபம்-ஆயுத எழுத்து
அதிகம் வேண்டாம்!
உன்
புன்னகை-உயிரெழுத்து
உதடு தொட்டால்
உயிர் மெய்யாகிறது!

கண்ணா
கண்ணீர் கடலில்
காதல் அலைகள்
வேண்டாம்!

இருண்ட பிறகும்
வெள்ளி பூக்க
இறுமாந்திருக்கும்
கருநீல வானமாய்
நம் காதலிருக்கட்டும்!

Thursday, November 13, 2008

இதய காதலின் ஆழம்..




உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்குத் தெரியுமா?

உன் பெயரை
என் பெயரோடு
இணைத்து எழுதி
ஆனந்தப்பட்டது
உனக்குத் தெரியுமா?

உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?

இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் இதய காதலின்
ஆழம் எங்கே
தெரியப் போகிறது?