உனக்கு மறந்து போயிருக்கும்
முதன் முதலாக கல்லூரி வாயிலில்
எனைப் பார்த்து நீ சிந்திய
உன் முதல் புன்னகை
அந்த நொடி பசுமையாய் என் நினைவில்..
அன்று பார்வைகள் மட்டும்தானே
பறிமாறிக் கொண்டோம்
பின் எப்படி
நீ மொத்தமாய் என்னுள்?
நம் மெளனங்கள்
தெளிவாய் பேசிக்கொண்டதை
நாம் சத்தமாய்
பேசுவதெப்போது???
பூட்டி வைத்த நேசம்
புண்ணியமில்லை
ப்ரியமானவனே புரியும்படி
பேசிக்கொள்வோம் வா!!
Saturday, December 13, 2008
மெளனங்கள்....கலையட்டும்
Posted by ப்ரதீபா at 11:16 AM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//நம் மெளனங்கள்
தெளிவாய் பேசிக்கொண்டதை
நாம் சத்தமாய்
பேசுவதெப்போது???//
அருமை..:-)
இயல்பான இந்த உணர்வை அழகாக ரசிக்கத் தக்க வகையிலே இனிப்பாய் சொன்ன விதம் அழகு.
மொத்ததில் அருமை.
//பூட்டி வைத்த நேசம்
புண்ணியமில்லை//
நல்லா இருக்கு :)
வெற்றியோ, தோல்வியோ... தெரியப்படுத்தினாலே தான் முடிவு தெரியும்... :)
//அன்று பார்வைகள் மட்டும்தானே
பறிமாறிக் கொண்டோம்
பின் எப்படி
நீ மொத்தமாய் என்னுள்?//
அழகான வரிகள்...
நீங்களே போய் பேசிகொள்ளலாமே அழகு கவிதை அழகு
/நம் மெளனங்கள்
தெளிவாய் பேசிக்கொண்டதை
நாம் சத்தமாய்
பேசுவதெப்போது???//
பூக்கள் இடிஓசையில் திறந்து விட்டன.. நாம் விழிப்பது எப்போது?
கவிதை அழகு தோழி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Post a Comment