எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னே கைது செய்யும்
கொடுமைக்காரனடா நீ!
Friday, November 28, 2008
கொடுமைக்காரா...!
Posted by ப்ரதீபா at 10:39 AM 5 comments
Saturday, November 22, 2008
மறந்துவிட்டாயா??
நெற்றி வகிட்டில்
நீ கொடுத்த
முத்தமும்...
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
சூறையாடிய தினமும்...
தனிமை கிடைக்கையில்
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
நீ ஏனோ எல்லாவற்றையும்
மறந்ததுபோல், மறந்துவிட்டாய்
என்னை...?!
Posted by ப்ரதீபா at 3:36 PM 10 comments
Tuesday, November 18, 2008
இதயத்தில் பறக்கும் காதல்...
என் ஒட்டுமொத்த
கவிதைகளும்
கண் 'துளி' நீரில்
தத்தளிக்கிறது!
இதயத்தில் பறக்கும்
காதல் விமானம்
இதழ்களில் இறங்க
மறுக்கிறது!
காதல் வந்தபிறகு,
வார்த்தைகள்
வயதுக்கு வந்துவிட்டதா?
தாவணி போட்ட
தமிழுக்கு
அத்தனை வெட்கமா?
உன்
கோபம்-ஆயுத எழுத்து
அதிகம் வேண்டாம்!
உன்
புன்னகை-உயிரெழுத்து
உதடு தொட்டால்
உயிர் மெய்யாகிறது!
கண்ணா
கண்ணீர் கடலில்
காதல் அலைகள்
வேண்டாம்!
இருண்ட பிறகும்
வெள்ளி பூக்க
இறுமாந்திருக்கும்
கருநீல வானமாய்
நம் காதலிருக்கட்டும்!
Posted by ப்ரதீபா at 11:46 AM 10 comments
Thursday, November 13, 2008
இதய காதலின் ஆழம்..
உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்குத் தெரியுமா?
உன் பெயரை
என் பெயரோடு
இணைத்து எழுதி
ஆனந்தப்பட்டது
உனக்குத் தெரியுமா?
உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?
இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் இதய காதலின்
ஆழம் எங்கே
தெரியப் போகிறது?
Posted by ப்ரதீபா at 11:46 AM 12 comments